"அந்நீதத்தாலே லோகம் அவனி ஈரேழும் வாடி
குன்னியே கலியில் மூழ்கி குறுகியே அலைதல் கண்டு
கன்னிகள் மதலையான கற்பக குலங்கள் தன்னில்
மன்னிக மனுப்போல் தோன்றி வளர்ந்து பின்னுதித்தார் தாமே.
குன்னியே கலியில் மூழ்கி குறுகியே அலைதல் கண்டு
கன்னிகள் மதலையான கற்பக குலங்கள் தன்னில்
மன்னிக மனுப்போல் தோன்றி வளர்ந்து பின்னுதித்தார் தாமே.
"என்றிந்த விவரமெல்லாம் எழுதியே உலகில் விட்டு
நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதிர் உதிக்கும் வேளை
பண்டிந்த மூலம் தன்னில் பஞ்சமி நேரம் தன்னில்
குண்டத்தின் அரசு கோமான் குவலயமதிலே வந்தார்"
-அகிலத்திரட்டு அம்மானை
நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதிர் உதிக்கும் வேளை
பண்டிந்த மூலம் தன்னில் பஞ்சமி நேரம் தன்னில்
குண்டத்தின் அரசு கோமான் குவலயமதிலே வந்தார்"
-அகிலத்திரட்டு அம்மானை
அய்யா வைகுண்டர் 1008 ஆம் ஆண்டு மாசி மாதம் 20-ம் நாள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சூரியன் உதிக்கும் சமயத்தில் பஞ்சமி திதியில் மூலம் நட்சத்திரத்தில் முப்பொருளும் ஒருபொருளாகி மனுவாக உதித்தார்.
அய்யா வைகுண்டரின் அவதார வருகை கொல்லம் 998 - ல் திருவாசகம் மூலம் அறிவிக்கப்பட்டது.
"திரு மொழி வாசகம் தன்னை தேசத்தில் வருமுன்னாக
வருவது திடனாமென்று வழுத்தினோம் தொளாயிரத்து தொன்னுற்றெட்டில்
ஒரு திருக்கூட்டமாக ஒராயிரத் தெட்டாமாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தினோமே "
-அகிலத்திரட்டு அம்மானை
வருவது திடனாமென்று வழுத்தினோம் தொளாயிரத்து தொன்னுற்றெட்டில்
ஒரு திருக்கூட்டமாக ஒராயிரத் தெட்டாமாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தினோமே "
-அகிலத்திரட்டு அம்மானை
கொல்லம் ஆண்டு 1016- ல் 2 மாதம் 7-ம் தேதியன்று வெள்ளிகிழமை அரி கோபாலன் சீடர் நாராயண சிந்தையுடன் துயின்ற நேரத்தில் அய்யா நாராயணர் அவரை துயில் எழுப்பி அய்யா வைகுண்ட அவதாரத்தின் காரணங்களையும் , ஏழு யுக நடப்புகளையும் விவரித்தார். பின்னர் "ஏர் " என்னும் அகிலத்திரட்டின் காப்பின் முதல் சீரை அடி எடுத்து கொடுத்தார். அதன் பின்னால் அனைத்தும் அவர் மனதில் இருந்து எழுதுவதற்கு துணை புரிந்தார்.சீடர் அரி கோபாலன் கை வண்ணத்தில் அகிலம் அகிலத்திரட்டு அம்மானை 5- வது வேதமாக உருவானது.
"வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதா வதுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே
தோத்திரம் என்று சொல்லி சுவாமிதன்னை நான் தொழுது
ராத்திரி தூக்கம் நான் வைத்திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்து பதினாறில்
காண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தேதி இருபத்தேழில் சிறந்த வெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் எழுப்பி செப்பினார் காரணத்தை
காப்பில் ஒரு சீர் கனிவாய் மிகத் திறந்து
தார்பரியமகச் சாற்றினார் எம்பெருமாள்
மகனே இவ்வாய்மொழியை வகுக்கும் காண்டமதுக்கு
யுகமோரறிய ஊனு நீ முதற் க்காப்பாய்
அதின் மேல் நடப்பு உன் உள்ளே அகமிருந்து
சரி சமனாய் தான் வகுப்பேன் தான் எழுது காண்டமதை
நானுரைக்க நீ எழுதி நாடு பதினாலறிய
யா னுரைக்க நீ எழுதி அன்போ ர்கள் தங்கள் முன்னே
வாசிக்க கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா "
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே
தோத்திரம் என்று சொல்லி சுவாமிதன்னை நான் தொழுது
ராத்திரி தூக்கம் நான் வைத்திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்து பதினாறில்
காண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தேதி இருபத்தேழில் சிறந்த வெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் எழுப்பி செப்பினார் காரணத்தை
காப்பில் ஒரு சீர் கனிவாய் மிகத் திறந்து
தார்பரியமகச் சாற்றினார் எம்பெருமாள்
மகனே இவ்வாய்மொழியை வகுக்கும் காண்டமதுக்கு
யுகமோரறிய ஊனு நீ முதற் க்காப்பாய்
அதின் மேல் நடப்பு உன் உள்ளே அகமிருந்து
சரி சமனாய் தான் வகுப்பேன் தான் எழுது காண்டமதை
நானுரைக்க நீ எழுதி நாடு பதினாலறிய
யா னுரைக்க நீ எழுதி அன்போ ர்கள் தங்கள் முன்னே
வாசிக்க கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா "
காப்பு:
"ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசு பண்ணி
காரணம் போல் செய்த கதை கட்டுரைக்க பூரனமாய்
ஆராய்ந்து பாட அடியேன் சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்."
"ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசு பண்ணி
காரணம் போல் செய்த கதை கட்டுரைக்க பூரனமாய்
ஆராய்ந்து பாட அடியேன் சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்."
- அகிலத்திரட்டு அம்மானை
அய்யா வைகுண்டர் கொல்லம் ஆண்டு 1026 -ம் ஆண்டு வைகாசி மாதம் 21 -ம் நாள் திங்கள் கிழமை மதியம் 12 மணியளவில், பூச நட்சத்திரத்தில் தனது மனித அவதாரத்தை துறந்து வைகுண்டம் ஏகினார்.
"பதறாமல் நீங்கள் பண்பாயொருப்போலே
சிதறாமல் நீங்கள் செய்ய அனுகூலமாய்
இருந்து மிக வாழும் என்று நாமம் கொடுத்து
திருந்து புகழ் மாயன் சிறந்த வோராயிரத்து
ஒரிருபத்தாறாம் ஓங்குமிடபமதில்
சீரியல்பான தேதி இருபத்தொன்றில்
பூருவ பட்சம் பூச நட்சத்திரத்தில்
வாறுடைய சோமவாரம் போழுதூர்ந்து
பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேலாசை உள்ளிறுத்தி
கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ
வைகுண்டமேக வழிகொண்டார் அம்மானை "
சிதறாமல் நீங்கள் செய்ய அனுகூலமாய்
இருந்து மிக வாழும் என்று நாமம் கொடுத்து
திருந்து புகழ் மாயன் சிறந்த வோராயிரத்து
ஒரிருபத்தாறாம் ஓங்குமிடபமதில்
சீரியல்பான தேதி இருபத்தொன்றில்
பூருவ பட்சம் பூச நட்சத்திரத்தில்
வாறுடைய சோமவாரம் போழுதூர்ந்து
பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேலாசை உள்ளிறுத்தி
கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ
வைகுண்டமேக வழிகொண்டார் அம்மானை "
- அகிலத்திரட்டு அம்மானை
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக