பல கோடி ஆண்டுகளாக மனிதர்கள் வாழும் இந்த பூலோகத்தின் வரலாறை அகிலத்திரட்டு அம்மானை 7 யுகங்களாக பிரித்து ஒவ்வொரு யுகங்களிலும் தோன்றிய அரக்கர்களையும், அவர்களால் உயிரினங்களுக்கு ஏற்பட்ட கேடுகளையும் அவற்றை அவ்வப்போது அவதரித்த இறைவன் சீர் செய்து தர்மத்தை நிலை நாட்டியதையும் தெளிவாக கூறியுள்ளது. அகிலம் சொல்லும் ஏழு யுகங்களும் அந்ததந்த யுகங்களில் தோன்றிய அரக்கர்களின் பெயர்களும் கீழே சொல்லப்பட்டுள்ளன.
நீடிய யுகம்
அரக்கன் :குறோணி
இறை அவதாரம்: நாராயண மூர்த்தி
ஆயுதம் : இறைவேகம்
அரக்கன் :குறோணி
இறை அவதாரம்: நாராயண மூர்த்தி
ஆயுதம் : இறைவேகம்
சதுர யுகம்
அரக்கன் :குண்டோமசாலி
இறை அவதாரம்: மாயன்
ஆயுதம் : தூண்டில்
அரக்கன் :குண்டோமசாலி
இறை அவதாரம்: மாயன்
ஆயுதம் : தூண்டில்
நெடிய யுகம்
அரக்கன் :தில்லை மல்லாலன், மல்லோசிவாகனன்
இறை அவதாரம்: திருமால்
ஆயுதம்: கணை / அம்பு
அரக்கன் :தில்லை மல்லாலன், மல்லோசிவாகனன்
இறை அவதாரம்: திருமால்
ஆயுதம்: கணை / அம்பு
கிரேதா யுகம்
அரக்கன் :சிங்கமுகாசுரன் , சூரபற்பன்
இறை அவதாரம்: ஆறுமுகன்
ஆயுதம்: சக்தி வேல்
அரக்கன் :இரணியன்
இறை அவதாரம்: நரசிம்மம்
ஆயுதம் : விரல் நகம்
அரக்கன் :சிங்கமுகாசுரன் , சூரபற்பன்
இறை அவதாரம்: ஆறுமுகன்
ஆயுதம்: சக்தி வேல்
அரக்கன் :இரணியன்
இறை அவதாரம்: நரசிம்மம்
ஆயுதம் : விரல் நகம்
திரேதா யுகம்
அரக்கன் : இராவணன்
இறை அவதாரம்: இராமபிரான்
ஆயுதம் : இராமபாணம் (அம்பு)
அரக்கன் : இராவணன்
இறை அவதாரம்: இராமபிரான்
ஆயுதம் : இராமபாணம் (அம்பு)
துவாபரயுகம்
அரக்கன் :துரியோதனன்
இறை அவதாரம்: ஸ்ரீ கிருஷ்ணன்
கருவி : பீமன்
ஆயுதம் : தண்டாயுதம்
அரக்கன் :துரியோதனன்
இறை அவதாரம்: ஸ்ரீ கிருஷ்ணன்
கருவி : பீமன்
ஆயுதம் : தண்டாயுதம்
கலியுகம்
அரக்கன் :கலி (மாயை)
இறை அவதாரம்: வைகுண்டர்
ஆயுதம் : அன்பு, தர்மம், பொறுமை
அரக்கன் :கலி (மாயை)
இறை அவதாரம்: வைகுண்டர்
ஆயுதம் : அன்பு, தர்மம், பொறுமை
முதல் ஐந்து யுகங்களில் இறைவன் தானே நேரடியாக அரக்கர்களை துவம்சம் செய்கிறார். வித விதமான ஆயுதங்கள் பயன்படுத்த படுகின்றன.ஆறாவது யுகமான துவாபர யுகத்தில் தனது தொண்டர்கள் மூலமாக தனது நேரடி பார்வையில் துரியோதனனை அழிக்கிறார். சத்த பலம் கொண்டவர்களையும் பீமன் மூலம் வதைக்கிறார்.
ஏழாவது யுகமான கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை தோற்றுவிக்க , மண்ணில் பிறந்த மிகவும் சக்திவாய்ந்த இறைவனின் அவதாரமாக , முப்பொருளும்( பிரம்மா, விஷ்ணு, சிவன் ) ஒருபொருளாய் இணைந்து , அய்யா வைகுண்டர் அவதரித்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. இந்த யுகத்தில் இறைவன் கலியை அழிப்பதற்கு புத்திமதிகளை தந்து விட்டு சென்றிருக்கிறார். கலியை அழிக்கும் பொறுப்பை சான்றோர்களின் வசம் விட்டு விடுகிறார்.
"மானமாக வாழ்ந்திருந்தால் மாளும் கலி தன்னாலே "
கலியை வெல்வதற்கு ஆயுதம் தேவையில்லை. அய்யா வைகுண்டர் எந்த ஆயுதமும் கையில் எடுக்கவில்லை. மாறாக அன்பு சேகரிக்க வந்தார் என்று அகிலம் சொல்கிறது.
அன்பென்னும் ஆயுதம் காயங்களை காயப்படுத்தாது. உள்ளங்களையும் காயப்படுத்தாது. அது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இதனை கொண்டு எதனையும் வெல்லலாம்.
அன்பென்னும் ஆயுதம் காயங்களை காயப்படுத்தாது. உள்ளங்களையும் காயப்படுத்தாது. அது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இதனை கொண்டு எதனையும் வெல்லலாம்.
கலியை வெல்வதற்கு பணம் தேவையில்லை. எனவே தான் அய்யா பண்டாரமாக அவதரித்தார். அரசனை வெல்வதற்கும் ஆண்டிகோலமே பூண்டார். படை எடுத்து வெல்லவில்லை. பண்பாலும்,பணிவாலும், துணிவாலும்,பொறுமையாலும் வென்றார்.
கலி என்பது நீசமடைந்த மாயை . உறவாடி கெடுக்கும். அறிவின் எதிரி. இது உடலால் வேறுபடுவதில்லை. உள்ளத்தால், எண்ணத்தால் வேறுபடுகிறது. எனவே தான் அய்யா நமக்கு ஞானபொக்கிஷமான அகிலத்திரட்டை கொடுத்துள்ளார். நமது உள்ளங்களை தூய்மைபடுத்தி ,சீர் படுத்தி, பதபடுத்தி, எங்கும் நிறைந்த இறைவனை உள்ளத்தில் நிரந்தரமாக நிலை படுத்தினால் மாயை நீங்கும். இருள் அகலும். தர்மம் பிறக்கும்.
அகிலத்திரட்டு நம் கையில் கிடைத்துள்ள மாபெரும் சக்தியாகும். ஆண்ட பகிரண்டம் வெல்ல அய்யாவால் கொடுக்கப்பட்ட ஆயுதமாகும். சரியாக அறிந்து, புரிந்து பயன்படுத்துவோர் கலியை வெல்வதும், தர்மயுகம் காண்பதும் நிச்சயம்.
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக