அய்யா வைகுண்டர் அருளிய அருள் நூலில் யுகபடிப்பு பகுதியில் முதல் வரியாக இருப்பது தான் இந்த அதிசய மந்திரம். துவையல் தவசு மேற்கொண்ட அய்யாவழி அன்பர்கள் அய்யா வைகுண்டரின் அறிவுரையின் படி அந்தி நேரங்களில் ஓதியது இந்த உகபடிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது .
அய்யா வைகுண்டரின் வாழ்வினைப்பற்றி எடுத்து சொல்வது இந்த கலியுகத்தின் தர்மமாகும். கலியை நெருங்கவிடாமல் நம்மை காக்கும் தர்மமாகும்.
அரகரா என்பது அய்யா நாராயணருக்கு அபயமிடும் மந்திரமாகும். சிவ சிவா என்பது சிவபெருமானை துதிக்கும் மந்திரமாகும் .
எனவே இந்த அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா என்னும் மந்திரம் நாராயணரையும் சிவபெருமானையும் இணைக்கும் மந்திரமாகும்.
அரியும் சிவனும் ஒன்றே என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் எளிய மந்திரமாகும்.
ஒருவர் சொல்ல அதனை கேட்டு அனைவரும் தொடர்ந்து சொல்ல இறைவழிபாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் உன்னத மந்திரம் இது.
மந்திரங்களில் இரகசியங்கள் இல்லாமல் பக்தர்கள் எல்லோரும் வெளிப்படையாக மனம் திறந்து வாய் விட்டு இறைவனை அழைக்கும் அன்பான மழலை சொல்லாகும் இந்த மந்திரம்.
இறைவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையே பூசாரி என்ற தரகரை ( தடைகல்லை உடைத்து ) நீக்கி மனிதனும் இறைவனும் தடையின்றி இணைய ச்செய்யும் அதிசய மந்திரம்.
பதிகளையும் , தாங்கல்களையும் பக்தியோடு அன்புக்கொடி மக்கள் வலம் வரும்போது மனதை ஒருநிலைபடுத்தி, சமநிலை படுத்தி, பண்படுத்தி, பதப்படுத்தும் தெய்வீக மந்திரம் ஆகும்.
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா
என்றே அனுதினமும் பாடுவோம்.
அன்பால் ஓன்று கூடுவோம்.
அன்பால் இறைவனை தேடுவோம்.
அய்யா வழியில் செல்லுவோம்.
என்றே அனுதினமும் பாடுவோம்.
அன்பால் ஓன்று கூடுவோம்.
அன்பால் இறைவனை தேடுவோம்.
அய்யா வழியில் செல்லுவோம்.
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக