விலங்குகளைப்போல் கடவுள் மனிதனையும் படைத்து சக்தியும், புத்தியும் , ஞானமும் கொடுத்து அவற்றை பயன்படுத்தி பிழைத்துக்கொள்ளும்படி விட்டு விடுகிறார். நாம் அறிவையும் முன்னோரின் அனுபவத்தையும் முறையாக பயன்படுத்தாமல் நம் வாழ்வை நாமே சீரழி த்துக் கொள்கிறோம். பொறாமையும் வஞ்சகமும் கொண்ட நமது சூழ்நிலை நம்மை வாழ விடாமல் பின்னோக்கி இழுத்து தான் மகிழ்ந்து கொள்கிறது .
நமது வாழ்க்கை ஒரு மேடையில் நடக்கும் நிழற்கூத்து தான்.
நமது வேஷத்தையும் நடிப்பின் திறமையையும் நாம் தீர்மானிக்கிறோம் . பின்னால் திரையாக இருப்பது இந்த சமூகம்.ஒளியாக இருப்பது இறை அருள்.
இங்கே ஒளி (இறை அருள்)சரியாய் இல்லாதபோது நம் வாழ்வு இருட்டாகி போகிறது.
நாம் ஒழுங்காக ஆடவில்லை என்றாலும் ( மதி ) அது தோல்வியான வாழ்க்கை யாகிவிடும்.
திரை (சமூகம் ) நல்லதாகவும் ஒழுங்கானதாகவும் இல்லாவிட்டாலும் நமது முயற்சி தோற்று போகும்.
நமது வாழ்க்கை ஒரு மேடையில் நடக்கும் நிழற்கூத்து தான்.
நமது வேஷத்தையும் நடிப்பின் திறமையையும் நாம் தீர்மானிக்கிறோம் . பின்னால் திரையாக இருப்பது இந்த சமூகம்.ஒளியாக இருப்பது இறை அருள்.
இங்கே ஒளி (இறை அருள்)சரியாய் இல்லாதபோது நம் வாழ்வு இருட்டாகி போகிறது.
நாம் ஒழுங்காக ஆடவில்லை என்றாலும் ( மதி ) அது தோல்வியான வாழ்க்கை யாகிவிடும்.
திரை (சமூகம் ) நல்லதாகவும் ஒழுங்கானதாகவும் இல்லாவிட்டாலும் நமது முயற்சி தோற்று போகும்.
ஒளியின் அலை வரிசைக்கேற்பவும், திரையின் அசைவுக்கேற்பவும் நாம் ஆடும் போதுதான் கூத்து சிறப்பாகிறது. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. இந்த குழப்பத்தில் ஜாதகம், வாஸ்து, பெயர் ராசி, எண் ஜோதிடம் , ராசிக்கல் , பில்லி சூன்யம் , நோய் பங்கு பெறுவது தவிர்க்க முடியாதது.
இவைகளை எல்லாம் வெல்லும் ஒரே சக்தி அந்த இறைவன் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மனம் ஏற்று கொள்ள மறுக்கும். காரணம் கலியுகம் மற்றும் கலியினால் ஏற்பட்ட மாயையின் தாக்கம்.
இவைகளை எல்லாம் வெல்லும் ஒரே சக்தி அந்த இறைவன் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மனம் ஏற்று கொள்ள மறுக்கும். காரணம் கலியுகம் மற்றும் கலியினால் ஏற்பட்ட மாயையின் தாக்கம்.
நான் நீயே அல்லாமல் நடப்பு வேறு இல்லையே - என்று அகிலத்திரட்டு அம்மானை.யில் அய்யா நாராயணர் வைகுண்டருக்கு வழங்கும் விஞ்சை பகுதி யில் சொல்லி இருக்கிறார் . இதன் உட்பொருளாவது விதியும் மதியும் இணைந்து தான் மனித வாழ்வை தீர்மானிக்கின்றன. மதியை நெறிபடுத்த நல்ல நூல்கள் துணை வேண்டும். ஒரு புத்தியாகி உள்ளன்பு கொள்ளும் போது நாம் புது புத்தி பெற்று பூலோகம் ஆள்வோம் என்பதில் ஐயமில்லை.
அகிலதிரட்டை அன்றாடம் வாசிப்போம் .விஞ்சை கற்போம். விதியை வசப்படுத்துவோம். கலியை வெல்வோம். சமதர்ம சமுதாயம் காண்போம் .
அகிலதிரட்டை அன்றாடம் வாசிப்போம் .விஞ்சை கற்போம். விதியை வசப்படுத்துவோம். கலியை வெல்வோம். சமதர்ம சமுதாயம் காண்போம் .
அய்யா உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக