திருமாலின் சூழ்ச்சியால் சான்றோர்களை பெற்றெடுத்தவுடன் சப்தகன்னிமார்கள் நாணம் கொண்டு மழலை களை போட்டுவிட்டு காட்டில் தவம் செய்ய சென்றதால் நாராயணன் தேவசங்கங்களை எல்லாம் கூட்டி அழைத்து , சிவன், பிரம்மா முதலாக அனைத்து தெய்வங்களும் பிறந்த குழந்தைகளுக்கு ஆளுக்கொரு நாமமிட்டு வாழ்த்தினர் . சரசுவதி தாயார் தாலாட்டு பாடினார் . பின்னர் குழந்தைகளுக்கு சேனை கொடுக்க வேண்டும் என்றெண்ணி வானலோகத்தின் அமிர்தத்தை கொன்டு வாருங்கள் என்று இரு தேவர்களை அனுப்புகிறார் இறைவன்.அவர்கள் இருபேரும் அந்த வானலோகத்தின் அமி்ர்தத்தை தேடி வைகுண்டம் வருகிறார்கள்.ஆனால் அங்கு அமிர்தத்தை காணாமல் இது என்ன மாயம் என்று வியத்து திகைத்து நின்றார்கள். மீண்டும் அங்கும்,இங்கும் தொடர்ந்து தேடுகிறார்கள் .அப்போதும் அவர்களால் அமிர்தத்தை காணமுடியவில்லை. ஆனால் அங்கு இரு அந்தணர்கள் ( ஆணும் பெண்ணும்) அமிர்தத்தை குடித்து கொழுத்தத்தோடு நில்லாமல் மீதமுள்ள அமிர்தத்தை மேனியெங்கும் அள்ளி பூசி சந்தோசமாய் கூத்தாடிகொண்டிருப்பதால் உடல் முழவதும் தேவாமிர்தம் ஓட்டி இருப்பதை பார்த்தார்கள். உடனே அவர்களை தட தடவென அவர்கள் இருவரையும் இழுத்து அவர்களை அடித்து சிவபெருமான் முன்பாக நிறுத்துகிறார்கள் . உடனே சிவபெருமான் திருமாலை நோக்கி "திருமாலே இந்த அந்தணர்கள் திருடி குடித்த அமிர்தம் அத்தனையும் நம் சான்றோர்களுக்கு கொடுக்கும் படி இவர்களை பூமியில் படையும்"என்றார் .உடனே அருகிலிருந்த தேவாதி தேவர்கள் கோபம் கொண்டு அந்தணர்கள் இருவரையும் கற்பக விருட்சமாக மாறும்படி சபித்தார்கள். உடனே அந்தணர்கள் சிவபெருமானை தொழுது எங்கள் சாபம் தீருவது எப்போது என்று வினவினர் . அதற்கு சிவபெருமான் "திருமால் வைகுண்டரை அவனியிலே அவதரித்து நீச குலமறுத்து , மாசு கலி அழித்து, உலகை தர்ம யுகமாக்கி ஒரு குடைக்குள் ஆள அன்பு சேகரிக்க வருவார். கலி அழிந்து தர்ம யுகம்உதிக்கும் சமயம் உங்கள் சாபம் தீரும் என்றார்.
"அமிர்தமத்தை நீங்கள் ஆக்கிரகந்தானடக்கி
குமிர்தமுடன் நீங்கள் குடித்திருங்கோ என்று சொல்லி
உங்களுக்கு பாலமிர்தம் ஊருமஅல்லால் இத்தாலம்
எங்களுக்கும் இத்தாலம் இசையாது கண்டீரே "
- அகிலத்திரட்டு அம்மானை
குமிர்தமுடன் நீங்கள் குடித்திருங்கோ என்று சொல்லி
உங்களுக்கு பாலமிர்தம் ஊருமஅல்லால் இத்தாலம்
எங்களுக்கும் இத்தாலம் இசையாது கண்டீரே "
- அகிலத்திரட்டு அம்மானை
மனித இனம் சாதி, மதம், என பிரிவினையினால் சிதைந்து எளியவனை வலியவன் கொடுமை செய்ததன் விளைவாக இறைவன் படைத்த உலகின் வளங்களையும், செல்வங்களையும், சிறப்புகளையும் எளியோர் அனுபவிக்க முடியவில்லை. இறைவன் அருளிய வேதங்களும் எளியோர்களை சென்றடையவில்லை. சாதி என்னும் அணையிட்டு கலி நீசம் கொண்டவர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. மறையும் மறையின் பொருளும் எளியோர்களுக்கு மறுக்கப்பட்டன, மறைக்க பட்டன. ( இரு அந்தணர்கள் ( ஆணும் பெண்ணும்) அமிர்தத்தை குடித்து கொழுத்தத்தோடு நில்லாமல் மீதமுள்ள அமிர்தத்தை மேனியெங்கும் அள்ளி பூசி சந்தோசமாய் கூத்தாடிகொண்டிருந்தனர் என்பது இதனையே சுட்டி காட்டுகிறது ).
கற்பக மரமாக மாறும் படி தேவர்கள் இட்ட சாபம் என்பது. சமுதாய புரட்சியின் மற்றும் சுழற்சியின் காரணாமாக வேதங்களையும், நீதிகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் நன்கு கற்றிருந்தாலும்அவர்கள் அதனை தாழ்ந்த சாதியினருக்கு ஓதுவதன் மூலம் தான் தங்களின் வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை குறிக்கிறது. அவர்களின் வளர்ச்சி இறைவனால் சூசகமாக தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியவும்.
"அமிர்தமத்தை நீங்கள் ஆக்கிரகந்தானடக்கி
குமிர்தமுடன் நீங்கள் குடித்திருங்கோ "
குமிர்தமுடன் நீங்கள் குடித்திருங்கோ "
இவ்வாறாக வாழ்வில் விதியின் விளையாட்டால் பின்தள்ளப்பட்டவர்கள் கூறும் ஞானத்தை அப்படியே ஏற்றுகொள்ளக் கூடாது. மனக்கசப்பினால் அவர்கள் கூறும் அறிவுரை சில சமயங்களில் கேடும் விளைவிக்கும் . எனவே அந்த யோசனைகளை அப்படியே ஏற்றுகொள்ளாமல் மறுபரிசீலனை செய்து , அதன் வேகத்தை மட்டுப்படுத்தி சரியாக பயன் படுத்தவேண்டும்.
மானிடர்கள் எல்லோரும் இறைவனின் பிள்ளைகளே. கலியின் மயக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அகிலம் என்னும் பதம் விட்டால் நாம் அனைவரும் அய்யாவிற்கு நல்ல பிள்ளைகளாகவும், செல்லபிள்ளை களாகவும், சுத்தமான பிள்ளை களாகவும் இருப்போம் என்பதில் ஐயமில்லை.
அகிலத்திரட்டை படிப்போம். அய்யாவின் வழியில் செல்லுவோம். அகில கலியை வெல்லுவோம் . தர்ம யுகம் காண்போம்.
அய்யா உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக