வியாழன், 16 ஏப்ரல், 2015

பெற்றதைக்கொண்டு பெருமையுடன் வாழ்வோம்.

ஆதியை தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதையாலே சீவனுக்கு இடறும் பெற்று
வாரிய மூணு கோடி வரமது தோற்றுபின்னும் 
மூரியன் மூணுலோகம் முழுதுமே அடக்கி ஆண்டான்.
-அகிலத்திரட்டு அம்மானை
இராவணன்சிவபெருமானை வேண்டி கடும் கடும்தவமிருந்து கயிலாயதிற்கேசென்று நாலரை கோடி வரங்களை பெற்றான் .
கயிலாயம் செல்லும் வழியில் மகாலக்ஷ்மியை சபலத்தோடு பார்த்ததினால் உயிரழிவிற்கான சாபமும் பெற்றான்.
அளவிற்கு அதிகமான வரங்களை பெற்றதினாலும், சலப எண்ணம் கொண்டதினாலும், மறதியை (Memory Loss) காரணமாக்கி மகாவிஷ்ணு இராவணன் பெற்ற 3 கோடி வரங்களை செயலிழக்க செய்தார். வெறும் ஒன்றரை கோடி வரங்களோடு பூலோகம் வந்தான்.
தனது மூர்க்க அரக்க குணத்தால் மூன்று லோகங்களையும் அடக்கி ஆண்டான்.
இராவணன் தன்னைக்கொல்ல இராமபாணங்களோடே
சிராமராய் மாயன் தானும் தசரதன் தனக்கு தோன்ற
விராகன மாது சீதை வில்லோடு உதிக்கத்தேவர்
மராமரக்குலங்களாக வந்தனர் புவியின் மீதே.
-அகிலத்திரட்டு அம்மானை
இராவணனின் அநீத அரக்க ராஜ்ஜியம் இப்படியாக ஒரு அகால முடிவுக்கு வந்தது.
எல்லாம் வல்ல இறைவனே விதி என்னும் முடிச்சை போட்டு விளையாட்டை தொடங்கி பின்னால் அதனை அரவமில்லாமல் அவிழ்த்தும் விடுகிறான்.
விதியைஅறியாத மக்கள் அழுது, புலம்பி, ஆர்ப்பரித்து,குதித்து, கொண்டாடி,கொந்தளித்து மாள்கிறார்கள். சிலருடைய வாழ்வும்,அழிவும் மனித இனத்திற்கு பாடம் புகட்டுவதாகவே இருக்கிறது.
எவ்வளவு பெற்றோம் என்பதல்ல முக்கியம். பெற்றதை வைத்துகொண்டு எப்படி பேரோடும் புகழோடும் வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா அரகரா அரகரா
அய்யா உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக