கலியின் கொடுமையால் வலியவன் தனது அற்ப சந்தோசதிற்காக எளியவனை கொடுமை செய்து ஆட்டிப் படைக்க மனிதன் தனக்குள் பிரித்துக் கொண்டது தான் சாதிகளாகும். செய்யும் தொழிலின் அடிப்படையில் தோன்றிய இந்த பிரிவினைகள் பின்னாளில் மனித இனத்தில் நிரந்தரமாக பிரிவினையை மட்டுமன்றி பேதங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தின.
சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை ,உயிரினங்கள் அனைத்தும் ஒரே பரம்பொருளின் பல்வேறு வகையான வெளிப்பாடுகளே என்பதை உலகிற்கு எடுத்துகூறவே அய்யா வைகுண்டர் தொட்டு நாமம் சாற்றும் வழக்கத்தை அய்யா வழி பதிகளிலும் தாங்கல்களிலும் புகுத்தினார்.
உயிரினங்கள் கொண்டுள்ள உடலின் ( மண்ணில் தோன்றி மண்ணில் மறையும்) நிலையின்மையை உணர்த்தும் வண்ணம் மண்ணைப்பயன் படுத்தினார்.
உள்ளத்தின் தூய்மையை குறிப்பதற்காக வெள்ளை நிற மண்ணை நாமமாக பயன் படுத்தினார்.
ஊனக்கண்களுக்கு எட்டாத இறைவனை அறிவதற்காக ஞானக்கண்ணாக ஜோதி வடிவத்தில் நாமத்தை கொடுத்தார்.
கையில் நான்கு விரல்களுக்கும் ஈடு கொடுக்கும் வலிமை மிக்க ஐந்தாவது விரலான கட்டை விரலால் நாமத்தை இடும் படி வைத்தார்.
சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை ,உயிரினங்கள் அனைத்தும் ஒரே பரம்பொருளின் பல்வேறு வகையான வெளிப்பாடுகளே என்பதை உலகிற்கு எடுத்துகூறவே அய்யா வைகுண்டர் தொட்டு நாமம் சாற்றும் வழக்கத்தை அய்யா வழி பதிகளிலும் தாங்கல்களிலும் புகுத்தினார்.
உயிரினங்கள் கொண்டுள்ள உடலின் ( மண்ணில் தோன்றி மண்ணில் மறையும்) நிலையின்மையை உணர்த்தும் வண்ணம் மண்ணைப்பயன் படுத்தினார்.
உள்ளத்தின் தூய்மையை குறிப்பதற்காக வெள்ளை நிற மண்ணை நாமமாக பயன் படுத்தினார்.
ஊனக்கண்களுக்கு எட்டாத இறைவனை அறிவதற்காக ஞானக்கண்ணாக ஜோதி வடிவத்தில் நாமத்தை கொடுத்தார்.
கையில் நான்கு விரல்களுக்கும் ஈடு கொடுக்கும் வலிமை மிக்க ஐந்தாவது விரலான கட்டை விரலால் நாமத்தை இடும் படி வைத்தார்.
தாழ்ந்த சாதிகாரர்களாக கருதப்படும் மனிதர்களைத்தொட்டாலோ , நெருங்கினாலோ அது தீட்டு என்றும், தோஷம் என்றும்,பாவம் என்றும் மேல் சாதிக்காரர்களால் கருதப்பட்ட காலம் அது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் அடிமையாக எண்ணி சாதிக்கொடுமை பேயாக தலைவிரித்து ஆடிய நேரம் அது. இன்றும் பல கோவில்களில் பூஜை செய்வோர்கள் திருநீறையும்,தீர்த்தத்தையும்,முத்திரியையும் பக்தர்களின் கைகளில் படாமல் போடும் வழக்கம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் வைகுண்ட பரம் பொருளோ தாழ்ந்தவரை தற்காக்கவந்தார். நீசர்களிடம் சிக்கிக் கொண்டு படாத பாடுகளை அனுபவித்த சான்றோர்களை விடுவித்து நற்கதி அளிக்க வந்தார்.
ஆனால் வைகுண்ட பரம் பொருளோ தாழ்ந்தவரை தற்காக்கவந்தார். நீசர்களிடம் சிக்கிக் கொண்டு படாத பாடுகளை அனுபவித்த சான்றோர்களை விடுவித்து நற்கதி அளிக்க வந்தார்.
பாலோடு நீரை தொடர்ந்து சேர்த்துகொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் பாலானது நீராகிவிடும். அதுபோலவே நீரோடு பாலை சேர்த்துகொண்டிருந்தால் நீரும் ஒரு கட்டத்தில் பாலாக மாறிவிடும். இதே தத்துவம் தான் இங்கே பயன்படுத்தபடுகிறது. பௌதிகத்திலும் உயிரியலிலும், சவ்வூடு பரவல் என்று ஒரு நிகழ்வைப்பற்றி யாவரும் படித்திருப்பீர்கள். இரு வேறுபட்ட அடர்த்தி கொண்ட ஒரே திரவப்பொருள் ஒரு சவ்வினால் பிரிக்கப்படும் போது ஏற்படும் மாற்றம் தான் அது. இரண்டு புறமும் உள்ள திரவமானது அதன் அடர்த்தி சமமாகும் வரை சவ்வின் வாயிலாக ஊடுருவிக்கொண்டே இருக்கும். காற்றும் , நீரும் அடர்த்தி அல்லது அழுத்தம் அதிகமான இடத்திலிருந்து அடர்த்தி அல்லது அழுத்தம் குறைந்த இடத்திற்கு செல்வது போலத்தான் என்றும் குறையாதஇறைவனின் அருள் தவ வலிமையும் மனவலிமையும் குறைந்த மக்களிடம் சென்று சேருகிறது.
தாழ்ந்தவன் தொட்டால் தீட்டு வரும் என்ற நிலைமையானது மாறி, எல்லாம் வல்ல ஏகபரம்பொருளாம் வல்லாத்தான் வைகுண்டர் தொட்டு நாமம் சாற்றும் போது இவருடைய தவ வல்லமை அவர்களுக்குள் ( மனிதர்களுக்குள் )சென்று மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த தொட்டு நாமம் சாற்றுதல் இன்றும் பதிகளிலும், தாங்கல்களிலும் அய்யாவின் மேல் நம்பிக்கை கொண்ட மனிதர்களுக்கு ஒரு மன வலிமையைத் தருகிறது. புத்துணர்ச்சியை தருகிறது. புத்துயிரளித்து மனிதனை மாமனிதனாக்குகிறது என்பதில் ஐயமில்லை. இங்கே சாற்றப்படும் நாமம் அய்யா தந்தது எனவே அது பெரிய நாமம் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
தமிழில் நாமம் என்ற சொல் பெயர் என்ற பொருள் பெறும். அய்யாவின் பிள்ளைகளாகிய நாம் அய்யாவின் நாமம் சூடி பெயரோடும் புகழோடும் வாழ்ந்து காட்டுவோம்.
தமிழில் நாமம் என்ற சொல் பெயர் என்ற பொருள் பெறும். அய்யாவின் பிள்ளைகளாகிய நாம் அய்யாவின் நாமம் சூடி பெயரோடும் புகழோடும் வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்க அய்யா நாமம்
வளர்க அய்யா தந்த நாமம்
வளர்க அய்யா தந்த நாமம்
அய்யா உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக