கண்ட கோவில் தெய்வம் என்று கை எடுத்தால் பலனும் உண்டோ?
இவ்வாறு மக்களை அய்யா வைகுண்டர் வினவுகிறார். இது இறைவனின் வெறும் கேள்வி மட்டுமல்ல தன் பிள்ளைகளின் மேல் கொண்ட பரிதாபமும், கவலையும் கலந்த வெளிப்பாடாகும். சொல் கேளா பிள்ளைகளின் மேல் ஒரு தகப்பன் கொள்ளும் கரிசனம் என்றும் சொல்லலாம் . குழந்தையின் மனம் புண்படாமல் தகப்பன் கூறும் அறிவுரை என்று கூட எடுத்துகொள்ளலாம்.
ஒரு தெய்வ வழிபாடு தான் மேன்மை தரும். தெய்வம் ஒன்றுதான் ஆனாலும் வழிபடும் தெய்வங்களின் எண்ணிக்கை ( மனதில்) அதிகமாகும் போது நம்பிக்கையின் ஆழம் குறைந்துவிடுவது இயல்பு. இறை நம்பிக்கை தான் மனதையும், எண்ணங்களையும்,சொல்லையும் செயலையும், வாழ்க்கை முறையையும் பான் படுத்தி, பதபடுத்தி செம்மைப் படுத்தும். உதாரணமாக, அய்யா வழியின் தலைமைப் பதியாக விளங்கும் சாமிதோப்பிற்க்கு சென்று வந்தால் மன அமைதியும், நோயின்மையும், செல்வச்செழிப்பும் , பேரும் புகழும் இன்னும் சகல வசதி வாய்ப்புகளும் வந்தடையும் என்பது அய்யாவழி அன்புக்கொடி மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல அனுபவபூர்வமான உண்மையும் கூட. யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அதே பதியின் வடக்கு வாசலில் அழுக்கான கிழிந்த உடைகளோடு, தங்கும் வீடின்றி ஆண்டுகளாக வயிற்றுக்காக பிச்சை எடுப்பவர்களும் இருக்கின்றனர். சாமிதோப்பை தேடி வரும் அன்பர்களுக்கு கிடைக்கும் பாக்கியம் , சாமிதோப்பிலேயே தங்கி இருக்கும் பிச்சைகாரர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?
நம்பிக்கையின் ஆழம் தான் காரணம்.
நம்பிக்கையின் ஆழம் தான் காரணம்.
இனத்துக்கு இனம் இருப்பேன் நான் சுவாமியென்று
மனதில் யாரோவென்று வையாதே என் மகனே
- அய்யா நாராயணர் வைகுண்டருக்கு விஞ்சையாக இதனைச்சொல்கிறார்.
மனதில் யாரோவென்று வையாதே என் மகனே
- அய்யா நாராயணர் வைகுண்டருக்கு விஞ்சையாக இதனைச்சொல்கிறார்.
அய்யாவழியை பின்பற்றும் அன்புக்கொடி மக்கள் பிற மதத்தவர்களோடு பகைமை பாராட்டவேண்டாம் என்பதையே இந்த விஞ்சை வெளிப்படுத்துகிறது. அவர்கள் வணங்கும் கடவுளும் நான் தான் என்று அய்யா சொல்கிறார். ஒரு குடும்பத்தலைவன் தன்னை பெற்றவர்களுக்கு தாய் தந்தையர்க்கு மகனாகவும், துணைவியாருக்கு கணவனாகவும், தனது குழந்தைகளுக்கு தகப்பனாகவும், மருமக்களாக வந்தவர்களுக்கு மாமனாராகவும் பேரக்குழந்தைகளுக்கு தத்தாவாகவும் விளங்குவது எப்படி சாத்தியமோ அப்படியே ஈரேழு லோகமும் படைத்த ஆண்டவனுக்கு பல நாமங்களில் / தலங்களுக்கு தக்கவாறும் / மக்களினங்களுக்கும் அவர்கள் செய்யும் தொழிலுக்கும் ஏற்பவும் மாறுபட்டு நிற்பது சாத்தியம் என்பது மட்டுமல்லாமல் ஒரு அத்தியாவசிய தேவை என்றும் ஆகிறது . நாம் வணங்கும் இறைவன் நமக்கு சொர்கத்தை தருவதில்லை. ஆனால் நாம் வாழும் வாழ்க்கை நெறிகள் மற்றும் ஒழுக்கம் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.வெறும் மத மாற்றங்கள் மட்டும் எந்த பிரச்சினைகளுக்கும் விடிவாகாது, முடிவுமாகாது. அய்யா சொல்லும் விஞ்சையின் படி வாழும் வாழ்வே தர்மயுகதிற்கு நம்மை அழைத்து செல்லும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை .
அய்யாவைப்பற்றியும் அகிலத்திரட்டைப்பற்றியும் அய்யா வழியைப்பற்றியும்,மலர இருக்கும் தர்மயுகம் பற்றியும் அறியாத மக்களுக்கு எடுத்து சொல்லுவோம். மக்களின் வாழ்க்கை நெறியினை நேர் படுத்துவோம்.அய்யாவழி என்பது ஒரு மதம் அல்ல , வாழும் நெறி என்று அகில மக்கள் அனைவருக்கும் உணர்த்துவோம். தர்மயுகவாழ்விற்க்கு ஆயத்தமாவோம் .
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக