வியாழன், 16 ஏப்ரல், 2015

உருவமிலா இறைவனை உணருங்கள்.

அய்யா வைகுண்டருக்கு கேரளாவில் சில இடங்களில் உருவம் வைத்து வழிபடுவதாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. சிலர் அய்யா வைகுண்டரை ஒரு புரட்சியாளர் என்றும் சித்தரிக்கின்றனர். முப்பொருளும் ஒருபொருளாய் அவதரித்த அய்யா வைகுண்டர் கலியுக தெய்வம் கர்த்தாதி கர்த்தனாவார். அவரை அற்புதங்கள் செய்த சாதாரண மனிதன் என்றும் அவருக்கு உருவம் கொடுத்து வழிபட செய்வோரும் நிச்சயமாக தெய்வ நிந்தனைக்கு உள்ளாவார்கள்.அய்யா வழியானது உருவ வழி பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. காரணம் அய்யாவழி ஒரு மதம் அல்ல. மனித குலத்தின் அறிவை பாழ் படுத்தும் கலி என்னும் மாயையை அறுத்து மக்களை இறைவனின் வழியில் இணையசெய்யும் வாழ்க்கை நெறி முறையாகும்.
உருவங்களையும் சிலைகளையும் வைத்து தான் அய்யாவை வழிபட வேண்டும் என்று ஆசை படுவோர்களும், அப்படித்தான் வழிபட முடியும் என்று நம்புவோர்களும் அய்யாவழியை விட்டு தாங்களாக விலகிக்கொள்ள வேண்டுகிறோம். அவர்கள் அடிமட்டத்தில் இருந்து கொண்டு வெறும் பக்தி செலுத்துவோராக இருந்தாலும், தலைமை பதியை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்களாக இருந்தாலும் ஒரே நியதிதான். இல்லையெனில் இப்படிப்பட்ட சுயநல கிருமிகள், நம்பிக்கை துரோகிகள் விரைவில் அய்யாவழியை விட்டு அய்யா வைகுண்டரால் தூக்கி எறியப்படுவார்கள் .
இவர்கள் சொன்னார்கள் என்பதற்காக அய்யா வைகுண்டர் காட்டிய அன்பு வழியை மறந்து இந்த கயவர்கள் பின்னால் அன்புக்கொடி மக்கள் யாரும் செல்ல வேண்டாம். இவர்கள் படைத்தவனை மறந்து தங்கள் சுய லாபத்திற்காக வழி முறைகளையும் அய்யாவின் கொள்கைகளையும் தங்கள் விருப்பம் போல் மாற்றினால் விரைவில் தனிமை படுத்த படுவார்கள் என்பது நிச்சயம்.
" போய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே"
"நல்லவர் நல்லாவார் நானுரைக்க கேள் அம்மானை "
- அகிலத்திரட்டு அம்மானை
வைகுண்டரின் (பொய்யான) உருவங்களை நிராகரியுங்கள்.
"ஒண்ணு சொல்ல ஒண்ணு கேட்டு உண்மையை காப்போம்"
அய்யா உண்டு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக