தெருவிற் காளாஞ்சித் தீவட்டி யும்பிடித்து
மருவினிய மாதர் மகாகுரவை மலமலென
டம்மானை நகாசுரம் நல்லவா ணவெடிகள்
மும்மான முளக்கம் போலே மிகமுழங்க
மருவினிய மாதர் மகாகுரவை மலமலென
டம்மானை நகாசுரம் நல்லவா ணவெடிகள்
மும்மான முளக்கம் போலே மிகமுழங்க
விளக்கம்:
கோவில் தெருவில் காளாஞ்சி, தீவட்டி போன்றவற்றை, மருவுவதற்கு இனிய மாதர்கள் பிடித்துக் கொண்டு இனிய குரவை ஒலியை எழுப்புவர். இடம்மான மேளமும், நாகசுரமும், நல்ல வாண வேடிக்கைகளும் மூன்று யானைகளின் முழக்கம் போன்று முழங்கிக் கொண்டிருக்கும்.
அகிலம்:
கன்னிமார்க் கெல்லாம் காவிப்பட் டாடைகொண்டு
பின்னு மடவார்க்குப் பெரியருத்தி ராட்சமிட்டு
நாமப் பொட்டிட்டு நல்லஎத் தாப்புமிட்டு
மாமடவா ரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வர
பின்னு மடவார்க்குப் பெரியருத்தி ராட்சமிட்டு
நாமப் பொட்டிட்டு நல்லஎத் தாப்புமிட்டு
மாமடவா ரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வர
விளக்கம்:
கன்னியர் எல்லாரும் காவி பட்டாடை உடுத்தி பெரிய உத்திராட்ச மாலை இட்டு நாமத்தினால் ஆகிய நீளப் பொட்டும் இட்டு, முந்தானைக்கு ஏத்தாப்பு ஆபரணம் இட்டு, மகிழ்வோடு தெரிவில் வருவர்.
அகிலம்:
எந்தன் பிரானும் எடுத்தா ரொருசொரூபம்
கந்தைக்கா விபூண்டு கழுத்தில்தா வடம்பூண்டு
கையதி லேமாத்திரைக்கோல் கமூக்கூட்டி லேபிரம்பும்
மெய்யதிலே வெண்பதமும் மினுக்க முடனணிந்து
உச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்தசுரைக் கூடுமிட்டு
மெச்சுந் துளசி மிகுமாலை யுமணிந்து
பிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச் சூழ்ந்துவரச்
சச்சிசச்சி யாகச் சனங்கள்சான் றோர்கள்வரக்
கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்தி ரமணிந்து
கந்தைக்கா விபூண்டு கழுத்தில்தா வடம்பூண்டு
கையதி லேமாத்திரைக்கோல் கமூக்கூட்டி லேபிரம்பும்
மெய்யதிலே வெண்பதமும் மினுக்க முடனணிந்து
உச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்தசுரைக் கூடுமிட்டு
மெச்சுந் துளசி மிகுமாலை யுமணிந்து
பிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச் சூழ்ந்துவரச்
சச்சிசச்சி யாகச் சனங்கள்சான் றோர்கள்வரக்
கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்தி ரமணிந்து
விளக்கம்:
நம் வைகுண்டர் கந்தையான காவி ஆடை உடுத்தி, கழுத்தில் தாவடமாலை அணிந்து கையில் மாத்திரைக் கோலைப் பிடித்து, க்க்கத்தினுள் பிரம்பைப் பிடித்துக் கொண்டு உடம்பு முழுவரும் வெண்மையான நாமத்தை மினுங்கிய வண்ணம் அணிந்து, உச்சிக் கொண்டையைச் சேர்த்துக் கட்டி உயர்வான சுரைக் குடுக்கையை உடம்பில் இட்டு, எல்லாரும் புகழும்வண்ணமாக, உச்சிக் கொண்டையின் மேல் துளசி மாலையைச் சுற்றி அணிந்து, பிச்சி மாலையைத் தலையிலும் கழுத்திலும் அணிந்து வேடமிட்டு வருவார். சான்றோர் இன ஆண்களும், பெண்களும் அவரை அலங்காரமாகச் சூழ்ந்து வருவர். அவரது கையருகில் நின்ற சீசர்கள் காவி ஆடை அணிந்து வருவர்.
அகிலம்:
மெய்க்குருவைப் போற்றி மேலில்ருத்தி ராட்சமிட்டுக்
கையதிலே மாத்திரரைக்கோல் கனத்தசுரைக் கூடுமிட்டு
மெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டு
அய்யா குருவேயென்று அவர்கள் மிகப் போற்றிவரத்
கையதிலே மாத்திரரைக்கோல் கனத்தசுரைக் கூடுமிட்டு
மெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டு
அய்யா குருவேயென்று அவர்கள் மிகப் போற்றிவரத்
விளக்கம்:
அவர்கள் கழுத்தில் உத்திராட்சமாலை இட்டு, கையில் மாத்திரைக் கோலும், உயர்வான சுரைக் குடுக்கையும் தாங்கி, உடம்பில் ஒரு பொக்கணத்தை இட்டு, திருநாமத்தை உடம்பெல்லாம் பூசியவண்ணமும் தமது உண்மையான குருவாகிய வைகுண்டரைத் துதித்தவண்ணமும், அய்யா, குருவே, என்று போற்றிக் கொண்டு அவரோடு நடந்து வந்து கொண்டிருப்பர்.
அகிலம்:
துய்ய துவையல் துவைத்தபண் டாரமெல்லாம்
காவிருத்தி ராட்சம் கனத்தசெம்புக் கடுக்கனிட்டு
நாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவே
ஆரா தனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும்
நாரா யணர்பேரில் நற்கீதம் பாடிவரத்
காவிருத்தி ராட்சம் கனத்தசெம்புக் கடுக்கனிட்டு
நாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவே
ஆரா தனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும்
நாரா யணர்பேரில் நற்கீதம் பாடிவரத்
விளக்கம்:
தங்களது ஆடைகளைச் சுத்தமாகத் துவைத்து உடுத்தி வந்த துவையல் பண்டாரங்கள் எல்லாரும் உத்திராட்சக்காய் புனைந்த மாலை அணிந்தும், காதில் அழகான செம்பு உலோகத்தினாலான கடுக்கன் அணிந்தும், அவர்கள் விருப்பத்துடன் நாவினால் சிவாய நம என்னும் மந்திரத்தை உச்சரித்தும் வந்து கொண்டிருப்பர். அவர்களோடு இறையருள் கொண்ட பெண்களும், ஆண்களும் இறை ஆராதனை கொண்டு நாராயணர் பெயரிலுள்ள நல்ல பாடல் வகைகளைப் பாடிக் கொண்டிருப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக