குட்டைஎடு என்றிடவே கூடாதென வுரைக்க
தட்டினான் வைகையிலே தலையற்று வீழ்ந்ததுவே
ஆனைதனை விட்டு அரசனந்த சோழனமன்னன்
சேனைத்தலைவர் சிறந்த சான்றோர்கள் தம்மில்
கொன்றான் ஒருவனையும் குளக்கரையில் அம்மானை
பின்னால் ஒருவனையும் பிடித்து கொண்டு வாருமென்றான்
குட்டை எடு என்று கூறினான் மாபாவி
திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சன்றோர்
முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான்
இன்னமிந்த குட்டை யாங்கள் தொடோம் என்றனராம்
பின்னுமந்த சோழன் பிடித்து ஒருவன் தனையும்
கொன்றான் காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி "
- அகிலத்திரட்டு அம்மானை
தட்டினான் வைகையிலே தலையற்று வீழ்ந்ததுவே
ஆனைதனை விட்டு அரசனந்த சோழனமன்னன்
சேனைத்தலைவர் சிறந்த சான்றோர்கள் தம்மில்
கொன்றான் ஒருவனையும் குளக்கரையில் அம்மானை
பின்னால் ஒருவனையும் பிடித்து கொண்டு வாருமென்றான்
குட்டை எடு என்று கூறினான் மாபாவி
திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சன்றோர்
முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான்
இன்னமிந்த குட்டை யாங்கள் தொடோம் என்றனராம்
பின்னுமந்த சோழன் பிடித்து ஒருவன் தனையும்
கொன்றான் காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி "
- அகிலத்திரட்டு அம்மானை
கலிநீசன் கொடுமையால் வைகை ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காது பெருக்கெடுத்து ஓடுகிறது .சோழமன்னன் பலவிதங்களில் முயன்று பார்த்தான். மக்களை அழிவினின்று காப்பாற்ற முடியவில்லை . கவலை தான் மிஞ்சியது. அப்போது மந்திரிமார்களில் ஒருவன் அந்த சோழ மன்னனுக்கு ஒரு புத்திமதி சொன்னான். " மன்னா இந்த வைகை யார் வந்து தடுத்து நிறுத்தினாலும் அது நிற்காது. சான்றோர் கள் வந்து இந்த பிரம்பு கூடையில் மண்ணெடுத்து வைத்தால் மட்டுமே இந்த அடங்கா வெள்ளம் கட்டுப்படும் என்று சூதான்யமாக சொன்னான். மன்னனும் உடனே கலியின் தாக்கத்தால் யோசித்து கூடப்பார்க்காமல் உடனே அந்த சான்றோர்களை கொண்டு வாருங்கள் என்றான். சேவகர்கள் உடனே சென்று சான்றோர்களை இழுத்து கொண்டு வந்தார்கள். " கூடையிலே மண்ணெடுத்து வைகை ஆற்றை அடையுங்கள் என்று ஆணையிட்டான். உடனே மானமுள்ள சான்றோர்கள் " மன்னா எங்களுக்கு எந்த வேலை சொன்னாலும் செய்கிறோம் ஆனால் நாங்கள் கூடையில் மண்ணெடுத்து சுமக்கமாட்டோம்' என்று பணிவாக மறுத்துப் பேசினர். மன்னனுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. நான் சொல்வதை நீங்கள் மறுத்து பேசுவதா? என்று கூறி தனது சேவகர்களிடம் " உடனே இவனை இந்த வைகை கரையில் அவன் கழுத்தளவிற்க்கு குழி தோண்டி அவனை அதில் புதைத்து பட்டது யானையை விட்டு தலையை இதறி விடுங்கள் என்று ஆணையிட்டான்.
ஒருவன் இறந்தபின்னால் சான்றோர்களில் மற்றவரை கூடை எடு என்று உத்தரவிட்டான்.
உத்தரவிற்கு சான்றோர்கள் அடிபணியவில்லை. மாறாக முன்னிறந்த எங்கள் சகோதரனை விட நாங்கள் மோசம்மில்லை என்று இறுமாப்போடு ( வீரத்தோடு)கூறினார். முதல்வனைப்போலே இரண்டாவதும் ஒருவனை தலையை இடறும் படி மன்னன் உத்தரவிட்டான். நாராயணனுக்கும் சப்தகன்னியர்க்கும் பிறந்த ஏழு சான்றோர்களில் இருவரை சோழ மன்னன் கொன்றுவிட்டான். இப்போது நாராயணர் தான் பெற்ற பிள்ளைகளைக்காக்க சொக்கராக சமைந்தார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியும் பட்டார் மண்ணேழும் அளந்த மாயன். ஐவரைஅழிவினின்றும் காத்துக்கொண்டார்.
ஒருவன் இறந்தபின்னால் சான்றோர்களில் மற்றவரை கூடை எடு என்று உத்தரவிட்டான்.
உத்தரவிற்கு சான்றோர்கள் அடிபணியவில்லை. மாறாக முன்னிறந்த எங்கள் சகோதரனை விட நாங்கள் மோசம்மில்லை என்று இறுமாப்போடு ( வீரத்தோடு)கூறினார். முதல்வனைப்போலே இரண்டாவதும் ஒருவனை தலையை இடறும் படி மன்னன் உத்தரவிட்டான். நாராயணனுக்கும் சப்தகன்னியர்க்கும் பிறந்த ஏழு சான்றோர்களில் இருவரை சோழ மன்னன் கொன்றுவிட்டான். இப்போது நாராயணர் தான் பெற்ற பிள்ளைகளைக்காக்க சொக்கராக சமைந்தார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியும் பட்டார் மண்ணேழும் அளந்த மாயன். ஐவரைஅழிவினின்றும் காத்துக்கொண்டார்.
உயிர் போகும் என்றறிந்தும் இந்த காரியத்தை செய்ய மாட்டேன் என்று உறுதியாக இருந்ததும் , உடன் பிறந்த சகோதரர்கள் உயிர் கண்ணெதிரே பறிக்க பட்டதை கண்ட பின்னரும் உறுதிபட நின்ற வீரம் தான் ( மானம் தான் ) அந்த ஆண்டவனையும் கீழிறங்கி வந்து மண்கூடையை தூக்கி தலையில் சேறு வழிய மண் சுமக்க வைத்தது.
"மானமாக வாழ்ந்திருந்தால் மாழும் கலி தன்னாலே "
என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்வதும் இதனை த்தான்.
என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்வதும் இதனை த்தான்.
வீரத்தோடும் மானத்தோடும் உயிர்வாழ்வோம் பூமியில்.
மானத்தோடு வாழ்வோரே வைகுண்டம் காண்பர்.
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக